கொவிட்-19 அச்சுறுத்தல்: ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகளை கட்டுப்படுத்த நோர்வே மறுபரிசீலனை!

கொவிட்-19 அச்சுறுத்தல்: ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகளை கட்டுப்படுத்த நோர்வே மறுபரிசீலனை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஸ்பெயினிலிருந்து வரும் மக்களுக்கு நோர்வே 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தல் விதியை மறுபரிசீலனை செய்யும் என நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சுவீடனின் அதிகமான மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் 100,000 குடிமக்களுக்கு 20க்கும் குறைவான உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய பொருளாதார பகுதி அல்லது ஷெங்கன் நாடுகளின் குடியிருப்பாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி நோர்வேக்குள் நுழைய முடியும்.

ஆனால், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தின் (ஈ.சி.டி.சி) சமீபத்திய தகவல்கள், ஸ்பெயினில் கொவிட்-19 நோய்த்தொற்றுகள் 100,000 மக்களுக்கு 30.9 ஆக உயர்ந்துள்ளன என்பதை காட்டுகின்றன.

இதனால், ஸ்பெயினிலிருந்து வரும் மக்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தல் விதியை அறிமுகப்படுத்துவதா என்பது குறித்து நோர்வே அரசாங்கம் பரிசீலனை செய்யவுள்ளது.