யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: இளைஞன் ஓருவரை துரத்திப்பிடித்த பொலிஸார்!

யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: இளைஞன் ஓருவரை துரத்திப்பிடித்த பொலிஸார்!

யாழில் தாக்குதல் சம்பவம் ஒன்றுக்கு தயார் நிலையில் இருந்த வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பருத்தித்துறைச் சேர்ந்த 21 வயது இளைஞனே வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: இளைஞன் ஓருவரை துரத்திப்பிடித்த பொலிஸார்! | Jaffna Sword Gang Police Chased Arrested Young Man

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள்வெட்டுக் கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு செல்வதற்காக தயாராகி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரை கண்டதும் வாள்வெட்டு கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளது.

யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: இளைஞன் ஓருவரை துரத்திப்பிடித்த பொலிஸார்! | Jaffna Sword Gang Police Chased Arrested Young Man

பொலிஸார் துரத்தி சென்று இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன், கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: இளைஞன் ஓருவரை துரத்திப்பிடித்த பொலிஸார்! | Jaffna Sword Gang Police Chased Arrested Young Man

மேலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.