
யாழில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பஸ்ஸில் இறங்க முற்பட்ட வேளை சாரதி பஸ்ஸை திடீரென நகர்த்தியமையால், பெண் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.