
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – நீா்வேலியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பீட மாணவா் ஒருவா் உயிாிழந்துள்ளாா்.
மானிப்பாய் – வேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில் உயிாிழந்துள்ளாா்.
இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.
சம்பவம் தொடா்பாக கோப்பாய் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.