யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! நூற்றுக்கணக்கானோர் கைது

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! நூற்றுக்கணக்கானோர் கைது

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றங்களினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! நூற்றுக்கணக்கானோர் கைது | 531 People Were Arrested In Yali Within A Monthஇதற்கமைய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும்,சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.