யாழ்ப்பாணம் மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் ஆண்டு நிறைவையோட்டி போட்டிகள்

யாழ்ப்பாணம் மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் ஆண்டு நிறைவையோட்டி போட்டிகள்

யாழ்ப்பாணம் மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் 34 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே அவர்களது திறன்களை ஊக்குவிக்குமுகமாக கலை ,கலாசார, விளையாட்டு போட்டிகளை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் சிவபாதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சக்கர நாற்காலி ஓட்டம், மூன்று சில்லு உந்துருளி ஓட்டம், சக்கர நாற்காலி பந்து போடுதல் ,பழம் பொறுக்குதல் ,நீர் நிரப்புதல் சமநிலையோட்டம் சாக்கோட்டம் ,கயிறு அடித்தல் ,பார்வையற்றவர்களுக்கான 50 மீற்றர் ஓட்டம் ,சித்திரப்போட்டி ,மாலை கட்டுதல் ,கோலம் போடுதல், கடித உறை ஒட்டுதல் ,கதிரை பின்னுதல், தையல் ,பாட்டு ,பேச்சு, நாடகம், விளக்குமாறு அடித்தல், நடனம் ,கவிதை ,கட்டுரை ஆகிய போட்டிகள் முன்னெடுக்கப்படவுள்ளன

வட மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நிறுவனங்களில் உள்ள அனைவரும் இப்போட்டிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதோடு அத்துடன் சுயமாக வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளும் இப்போட்டிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். போட்டிகள் யாவும் கீழ் பிரிவு மேற்பிரிவு என இரு பிரிவுகளாக மற்றும் ஆண் பெண் பிரிவு அடிப்படையில் நடாத்தப்படும் போட்டிக்கான விண்ணப்ப முடிவு திகதி மார்ச் 3 ஆம் திகதியாகும். மேலும் இப்போட்டிகளுக்கு வயதெல்லை குறிப்பிடப்படவில்லை.

எனவே குறித்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர்  arodinjaffna@Gmail.com எனும் மின்னஞ்சலின் ஊடாகவும் ,47/2 ஆடியபாதம் வீதி திருநெல்வேலி வடக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எமது மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் அலுவலகத்தில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.மேலதிக தகவல்களை பெற 0212215925 ,0776681798 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலம் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .