கனடாவில் வேலை வாய்ப்பு - இருபது கோடி ரூபா மோசடி செய்தவர் கைது

கனடாவில் வேலை வாய்ப்பு - இருபது கோடி ரூபா மோசடி செய்தவர் கைது

கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து கிரிபத்கொட பகுதியில் சுமார் இருபது கோடி ரூபாவை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

குறித்த நபர் கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 44 பேரிடம் 20 இலட்சம் முதல் 75 இலட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தற்போது அவர் தமது குடும்ப உறுப்பினர்களுடன் டுபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.