பெண்கள் விடுதியில் வைத்தியர் வேடம் போட்டிருந்த இளைஞன் கைது!

பெண்கள் விடுதியில் வைத்தியர் வேடம் போட்டிருந்த இளைஞன் கைது!

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையின் பெண்கள் விடுதிக்கு வைத்தியர் போன்று தன்னை அடையாளப்படுத்தி வந்த நபர் ஒருவர், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திஹாரி, தர்கா மாவத்தையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்தச் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து இதயத் துடிப்புமானி - 01, போலி இறப்பர் முத்திரை - 01, சிரின்ஜர் - 01, சேலைன் குழாய் - 01, ஈ.சி.ஜி. ரோல் 05, மடிக்கணினி 01, தொலைபேசி 01, மோட்டார் சைக்கிள் 01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை, அத்தனகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.