
அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்தது!
அமெரிக்காவில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 444பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை 44இலட்சத்து 33ஆயிரத்து 410பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 61ஆயிரத்து 571பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 596பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 21இலட்சத்து 46ஆயிரத்து 363பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19ஆயிரத்து 100பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 21இலட்சத்து 36ஆயிரத்து 603பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.