ஐபில் மேட்ச்சால் கொழும்பில் உயிரிழந்த தமிழ் இளைஞன்

ஐபில் மேட்ச்சால் கொழும்பில் உயிரிழந்த தமிழ் இளைஞன்

கொழும்பில் ,ஐபில் மேட்ச் பார்க்கவேண்டும் என்பதற்காக துவிச்சக்கர வணடியில் அதிவேகமாக பயணித்த இளைஞர் மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கொழும்பு கல்கிசையை சேர்ந்த 17 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். கடந்த முறை இடம்பெற்ற கா.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐபில் மேட்ச்சால் கொழும்பில் உயிரிழந்த தமிழ் இளைஞன் | Tamil Youth Killed In Colombo By Ipl Match

இந் நிலையில், கிரிகெட் போட்டி மீதான மோகம் இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை அதீத சில ஈர்ப்புக்கள் இளையோரிடையே , அவர்களின் உயிருக்கு கூட ஆபத்தாகும் நிலமை தற்போது தோன்றியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் சமூகத்தில் இடம்பெறுகின்றமை பெரும் வேதனைக்குரியதொன்றாகும்.