21 வயது இளைஞர் கொலையில் சித்தப்பா சிக்கினார்

21 வயது இளைஞர் கொலையில் சித்தப்பா சிக்கினார்

ஹக்மன பிரதேசத்தில் இடம்பெற்ற 21 வயது இளைஞர் கொலைச்சம்பவத்தில் உயிரிழந்த இளஞ்னின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹக்மன கஹடகஹகொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

21 வயது இளைஞர் கொலையில் சித்தப்பா சிக்கினார் | A 21 Year Old Youth Was Murdered In Haimana Area

ஹக்மன கஹடகஹகொரட்டுவ பிரதேசத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று(15) கொலை செய்யப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக அவரது சிறிய தந்தை இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த, ஹக்மன கல்கந்த பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகபொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.