சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் உணவகங்களைத் தேடி விரிவான சோதனை நடவடிக்கை!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி உணவு விற்பனையில் ஈடுபடும் உணவகங்களைத் தேடி விரிவான சோதனைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக காலி முகத்திடல், ஹிக்கடுவை, எல்ல போன்ற பகுதிகளை இலக்கு வைத்து குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி வடை ஒன்றினை 800 ரூபாய்க்கும், கொத்து ரொட்டியை 1,900 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.