பலத்த மின்னல் தாக்கம் - அண்ணன், தங்கை பரிதாப உயிரிழப்பு

பலத்த மின்னல் தாக்கம் - அண்ணன், தங்கை பரிதாப உயிரிழப்பு

இரத்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் வெல்காலயாய - இரத்தோட்டை பகுதியில் நேற்று (29.4.2024) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நாட்டில் நேற்று பெய்த கன மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர்.

பலத்த மின்னல் தாக்கம் - அண்ணன், தங்கை பரிதாப உயிரிழப்பு | Two Died Due To Lightning Strike

12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரது சடலங்களும் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.