குடும்பத் தகராறு ரயிலில் பாய்ந்து உயிரைவிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்
ரயிலில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றையதினம் (08) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மருதானை ரயில் நிலையத்துக்கு அருகில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் குடும்பத் தகராறு காரணமாக அவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்திருக்கலாம் பொலிஸார் சந்தெகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.