கொரோனா வைரஸ்: சுய தனிமை காலம் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட வாய்ப்பு!

கொரோனா வைரஸ்: சுய தனிமை காலம் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட வாய்ப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அறிகுறிகள் உள்ளவர்கள் சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய காலம் இங்கிலாந்தில் 10 நாட்களாக நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இருமல், அதிக வெப்பநிலை அல்லது சுவை அல்லது வாசனையின் இழப்பு ஆகிய முக்கிய அறிகுறிகளைக் காட்டும் மக்கள், ஏழு நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்.

ஆனால், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் ஏழுக்கு பதிலாக 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் இன்று (வியாழக்கிழமை) தனிமைப்படுத்தும் காலம் அதிகரிப்பதாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இதே கொள்கையை பின்பற்றுமா என்பது தெளிவாக தெரியவில்லை.

ஒவ்வொரு 14 பிரித்தானியர்களில் ஒருவர் ஏற்கனவே கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

ஐரோப்பாவின் சில பகுதிகளில் தொற்றுநோய்களின் இரண்டாவது அலை அறிகுறிகள் இருப்பதாக பிரதமர் எச்சரித்ததை அடுத்து எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதற்கிடையில், இன்று (வியாழக்கிழமை) லெய்செஸ்டரில் உள்ள கட்டுப்பாடுகளை, முடக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கப்படுகிறது