யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து மாங்குளத்தில் விபத்து : மற்றுமொருவர் உயிரிழப்பு

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து மாங்குளத்தில் விபத்து : மற்றுமொருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு (Mullaitivu) - மாங்குளத்தில் (Mankulam) கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் சிகிச்சை பலனின்றி இன்று(29) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் (Jaffna Teaching Hospital) அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் (ONUR )பணிப்பாளர் சபை பிரதிநிதியாக கந்தசாமி கருணாகரன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து மாங்குளத்தில் விபத்து : மற்றுமொருவர் உயிரிழப்பு | Jaffna To Colombo Bus Accident In Mankulam 4 Diedயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் பின்புறம் வீதியால் பயணித்த பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

 

அம்பாறையில் விபத்து : வாய்க்காலுக்குள் பாய்ந்த அரச பேருந்து

அம்பாறையில் விபத்து : வாய்க்காலுக்குள் பாய்ந்த அரச பேருந்து

 

நால்வர் உயிரிழப்பு 

 

விபத்து ஏற்பட்ட அதேநாளில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து மாங்குளத்தில் விபத்து : மற்றுமொருவர் உயிரிழப்பு | Jaffna To Colombo Bus Accident In Mankulam 4 Died

இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.