யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நால்வருக்கு நேர்ந்த கதி!

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நால்வருக்கு நேர்ந்த கதி!

யாழ். மருதனார்மட பகுதியில் இளைஞன் ஒருவரை மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (26-07-2024) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நால்வருக்கு நேர்ந்த கதி! | Jaffna Youth Sword Attack Four Suspects Remanded

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மருதனார்மடம் சந்தியில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை தனது வியாபார நடவடிக்கையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பியோடியுள்ளனர்.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நால்வருக்கு நேர்ந்த கதி! | Jaffna Youth Sword Attack Four Suspects Remanded

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இளைஞர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய வேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

முன் பகை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.