யாழில் சந்தேக நபர் மீது கைவைத்த பொலிஸார் பணிநீக்கம்!

யாழில் சந்தேக நபர் மீது கைவைத்த பொலிஸார் பணிநீக்கம்!

சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவில் பணிபுரியும் இரண்டு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸார், பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

யாழில் சந்தேக நபர் மீது கைவைத்த பொலிஸார் பணிநீக்கம்! | Policeman Attacked A Suspect Has Been Dismissed

தாக்குதலுக்கு உள்ளான சந்தேக நபர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பில் பருத்தித்துறை குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குடிபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் , அவர் கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது அதிகாரி சம்பவத்தன்று சம்பவ இடத்திலிருந்து வெளியேறினார். இரு பொலிஸாரையும் நீதிமன்றில் முற்படுத்தியபோது, இருவரும் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதேசமயம் இரு பொலிஸாரும் காங்ககேசந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணை முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்