யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழ். வட்டுக்கோட்டை - பொன்னாலை மேற்கு சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவமானது நேற்றையதினம் (29) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! | Jaffna Young Family Man Committed Suicide Died

குறித்த சம்பவத்தில் 28 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான கெலும் சஞ்சீவ ரூபசிங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த நபர் அநுராதபுரத்தை சேர்ந்தவர் எனவும், அவர் கடந்த ஆண்டு பொன்னாலை - சுழிபுரம் மேற்கில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! | Jaffna Young Family Man Committed Suicide Died

மேலும் உயிரிழந்த நபருக்கு போதைவஸ்து பழக்கம் உள்ள நிலையில் ஒரு தடவை இவரை தடுத்தவேளை குழாய் மின்குமிழை சாப்பிட்டுள்ளார்.

அறிவுறுத்தி தடுக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் வீட்டுக்கு அருகேயுள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி கயிறு அறுந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளாக கூறப்படுகிறது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதோடு, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.