யாழ்.பருத்தித்துறையில் அடித்துகொல்லப்பட்ட இளைஞன்! இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி

யாழ்.பருத்தித்துறையில் அடித்துகொல்லப்பட்ட இளைஞன்! இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி

யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களில் சேவையே இவ்வாறு நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.பருத்தித்துறையில் அடித்துகொல்லப்பட்ட இளைஞன்! இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி | Jaffna Youth Beaten Death 2 Police Officer Suspend

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பின்னர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

யாழ்.பருத்தித்துறையில் அடித்துகொல்லப்பட்ட இளைஞன்! இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி | Jaffna Youth Beaten Death 2 Police Officer Suspend

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனையின் போது அதிக இரத்தப்போக்கு காரணமாகவும், உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவும் பலத்த அதிர்ச்சியினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.