யாழில் தனிமையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு மர்ம நபர்களால் காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் தனிமையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு மர்ம நபர்களால் காத்திருந்த அதிர்ச்சி!

யாழ். வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின் உறுதிப் பத்திரங்களையும் தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழில் தனிமையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு மர்ம நபர்களால் காத்திருந்த அதிர்ச்சி! | Suspects Attack Woman Was Sleeping Alone In Jaffna

இச்சம்பவம் இன்றையதினம் (01-08-2024) அதிகாலை வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

இன்று அதிகாலையில் வீட்டில் தனிமையில் உறங்கிகொண்டிருந்தவேளை கதவை உடைத்து முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத நபர்கள்  68 வயதுடைய வயோதிப் பெண்மீது தாக்குதல் நடாத்தி காரிலிருந்த தங்க தோடு, தாலி ஆகியவற்றையும் கொள்ளையிட்டதுடன் அவரிடம் இருந்த 10,000 ரூபா பணத்தையும் பறித்தெடுத்ததுடன் அவர்களது காணிகளின் உறுதி பத்திரங்களையும் கோரியுள்ளனர்.

யாழில் தனிமையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு மர்ம நபர்களால் காத்திருந்த அதிர்ச்சி! | Suspects Attack Woman Was Sleeping Alone In Jaffna

குறிப்பாக சமீபத்தில் கொள்வனவு செய்த காணியின் உறுதிப் பத்திரத்தையும் கோரியுள்ளனர்.

அப்போது அச்சத்தில் வயோதிப பெண் உறுதிப் பத்திரத்தை காண்பிக்க அதனை தீயிட்டு கொழுத்தியதுடன் அவரது பாவனை உடுபுடவைகளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த முதிய பெண்மணி சமீபத்தில் கொள்வனவு செய்த காணியில் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம் பெறுவதாகவும், அதற்கான பணம் எங்கே இருக்கிறது என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர்.

யாழில் தனிமையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு மர்ம நபர்களால் காத்திருந்த அதிர்ச்சி! | Suspects Attack Woman Was Sleeping Alone In Jaffnaஅதற்கு அவர் இருந்த காசில்தான் கற்களை பறித்து வேலை செய்யத்தொடங்கியுள்ளோம் என்றும் கூற பொய் சொல்வதாக கூறி தாக்கியுள்ளனர்.

குறித்த வயோதிப பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், புதிதாக கொள்வனவு செய்த காணியில் இரவுக் காவலிற்க்காக தங்கியிருந்த கணவர் அதிகாலை 5 மணிபோல் வீட்டிற்க்கு வந்தபோது தனது மனைவி இரத்த காயங்களுடன் கிடந்ததை கண்டு உடனடியாக அயலவர் உதவியுடன் தனது மனைவியை மீட்டு பருத்தித்துறை அதார வைத்தியசாலையில் அனுமதுத்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.