திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியவர்களுக்கு வழியில் நேர்ந்த துயரம்

திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியவர்களுக்கு வழியில் நேர்ந்த துயரம்

கொழும்பு - கண்டி வீதியில் வேவல்தெனிய பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் 8 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புகையிலேயே சாரதியின் கவனக்குறைவினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியவர்களுக்கு வழியில் நேர்ந்த துயரம் | Tragedy Befell Those Returning From The Wedding

விபத்தில் உயிரிழந்தவர்கள் கெலிஓயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. நிட்டம்புவவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மூவரில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் வறக்காப்பொல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளார்.