யாழில் வீடொன்றினை தாக்குமாறு வெளிநாட்டில் இருந்து உத்தரவு! மூவர் கைது

யாழில் வீடொன்றினை தாக்குமாறு வெளிநாட்டில் இருந்து உத்தரவு! மூவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) - வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது டுபாயில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கமைய வீட்டிற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில் வீடொன்றினை தாக்குமாறு வெளிநாட்டில் இருந்து உத்தரவு! மூவர் கைது | Three Arrested In Jaffna For Commiting Violence

இதனால் மூன்று இலட்சம் வரையான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் வீடொன்றினை தாக்குமாறு வெளிநாட்டில் இருந்து உத்தரவு! மூவர் கைது | Three Arrested In Jaffna For Commiting Violence

பொலிஸ் விசாரணையின் போது டுபாயில் இருந்து வீட்டை தாக்க உத்தரவு கிடைத்ததாகவும் அதற்கமைய கூலிப்படை குறித்த வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.