யாழில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த துயரம்

யாழில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம்(Jaffna) - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்(25.08.2024) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவர் திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை இடம் பெற்று வருவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த துயரம் | Suffering From Husband To Wife In Jaffna

இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 28 வயதான பெண் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன் போது காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கணவன் தப்பி சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.