யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் குடும்பப் பெண்!

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் குடும்பப் பெண்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் இன்றையதினம் (27-08-2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் குடும்பப் பெண்! | Young Family Woman Jaffna Teaching Hospital Died

இச்சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்ப பெண் கடந்த 25ஆம் திகதி தீயில் எரிந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் குடும்பப் பெண்! | Young Family Woman Jaffna Teaching Hospital Died

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

 

இதேவேளை, குறித்த பெண்ணுக்கு அவரது கணவனே தீ வைத்ததாக உயிரிழந்த குடும்ப பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் கணவன் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் குடும்பப் பெண்! | Young Family Woman Jaffna Teaching Hospital Died

இந்த நிலையில் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.