நல்லூர் கந்தனுக்கு இன்று தேர்த்திருவிழா (நேரலை)

நல்லூர் கந்தனுக்கு இன்று தேர்த்திருவிழா (நேரலை)

இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு நிறைந்த ஆலயம் தான் நல்லூர் கந்தசுவாமி ஆலயம். இந்த ஆலயத்தில் தற்போது மகோற்சவ திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன்படி கடந்த 09ஆம் திகதி (09.08.2023) நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளை 02 ஆம் திகதி தீர்த்த திருவிழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்றைய தேர்த்திருவிழாவில் ஆறுமுகப் பெருமான் கஜாவல்லி, மஹாவல்லி சமேத ஸ்ரீ சண்முகப் பெருமானாக எழுந்தருவது வழமை.

மஹோற்சவ தினங்களில் அருளொளி வீசும் கம்பீரமான தோற்றத்துடனும், எல்லையில்லாக் கொள்ளை அழகு தரிசனமும் நல்லூரானின் சிறப்பாகும்.

நல்லூர் கந்தனுக்கு இன்று தேர்த்திருவிழா (நேரலை) | Jaffna Today Day Of Nallur Kanthan Festival

மேலும், நல்லூரானின் பூங்காவனம் நாளை மறுதினம் (03) மாலையும், வைரவர் உற்சவம் 04ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.