வலிப்பு ஏற்பட்டு சிறுமி அவதி ; யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மருத்துவமனை!

வலிப்பு ஏற்பட்டு சிறுமி அவதி ; யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மருத்துவமனை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ, அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இருப்பதில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அம்பன் பிரதேச வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலை தரம் இரண்டு ஆகும். இந்த வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்கள் பகலில் கடமையில் உள்ளனர்.

வலிப்பு ஏற்பட்டு சிறுமி அவதி ; யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மருத்துவமனை! | Hospital That Has Caused Controversy In Jaffnaஎனினும் இரவு வேளைகளில் வைத்தியர்கள் எவரும் கடமையாற்றுவதில்லை. இரவு வேளைகளில் வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்கள் செல்லும் போது நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவது வழமையாகும்.

இந்நிலையில், நேற்றைய தினம் (19) அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு நாகர்கோவில் பகுதியிலிருந்து வலிப்பு ஏற்பட்டு சிறுமி ஒருத்தியை அவரது பெற்றோர் இரவு 8:30 மணியளவில் கொண்டு சென்றுள்ளனர்.

வலிப்பு ஏற்பட்டு சிறுமி அவதி ; யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மருத்துவமனை! | Hospital That Has Caused Controversy In Jaffna

ஆனால் அம்பன் பிரதேச வைத்தியசாலையினுடைய நோயாளர் காவு வண்டி இல்லை. அது ஏங்கே என்று கேட்டபோது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு மருத்துவமனையில் வைத்தியரும் இல்லாத நிலையில், நோயாளர் காசு வண்டியும் இல்லை அவசர நோயாளர்களின் நிலை என்ன என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் அம்பன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியை அழைத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ள நிலையில் இதனால் சுமார் 50 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.