
பிரித்தானியாவில் புதிய வீடுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு “தானியங்கி” அனுமதி வழங்க தீர்மானம்
பிரித்தானியாவில் திட்டமிடல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக புதிய வீடுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு “தானியங்கி” அனுமதி வழங்கப்படும் என வீடமைப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
விரைவாக அமைக்கப்படும் கட்டடத்தை புதுப்பிக்க நியமிக்கப்பட்ட நிலத்தின் முன்னேற்றங்களுக்கு கொள்கையளவில் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக 5 பில்லியன் பவுண்ட்ஸ் நிதியை ஒதுக்க பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2011 மற்றும் 2016 க்கு இடையில் பிரித்தானியாவில் 280,000 வீடுகள் அமைப்பதற்கான அனுமதி கிடைக்கபெற்றபோதும் அவை ஒருபோதும் கட்டப்படவில்லை என்று வீடற்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் முன்வைக்கப்படும் மாற்றங்கள் இங்கிலாந்தை மட்டுமே பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் தேசிய திட்டமிடல் கொள்கை ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.