யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம்

யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம்

யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது நேற்றையதினம் (06.10.2024) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பையா சிவனேஷ்வரன் என்ற 42 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்த மனநலம் குன்றிய ஒருவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் நான்கு தினங்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம் | Body Of Man Found In Decomposed State In Jaffna

சடலம் மிகவும் உருக்குலைந்து காணப்பட்ட நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.