யாழில் கோவில் உண்டியலை உடைத்தவருக்கு நேர்ந்த கதி!

யாழில் கோவில் உண்டியலை உடைத்தவருக்கு நேர்ந்த கதி!

யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, சிட்டிவேரம் ஆலயத்தில் திருடியதாகக் கூறப்படும் ஒருவரை ஆலய பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மேற்படி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை (21) இரவு திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலே இவ்வாறு திருடப்பட்டது.

யாழில் கோவில் உண்டியலை உடைத்தவருக்கு நேர்ந்த கதி! | Person Who Stolen Jaffna Temple

ஆலயஉண்டியலை திருடிக்கொண்டு இச்சந்தேக நபர் தப்பியோடிய போது பின் தொடர்ந்து சென்ற ஆலய பாதுகாவலர்கள் இவரை மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.