கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து... துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்!

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து... துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்!

பொரளை மயானத்திற்கு அருகில் கித்துல்வத்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (17-11-2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து... துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்! | Borella Motor Cycle Accident One Person Died

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாரஹேன்பிட்டியில் இருந்து கித்துல்வத்தை வீதியை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து... துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்! | Borella Motor Cycle Accident One Person Died

உயிரிழந்தவர் பொரளை சீவலிபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் இருவர் வந்ததாகவும், விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் காரில் பொருத்தப்பட்டிருந்த கமராவை கழற்றிவிட்டு ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் இவருக்குதான்! சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு