யாழில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரின் வீட்டிற்கு சென்ற பதில் அரசாங்க அதிபர்!

யாழில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரின் வீட்டிற்கு சென்ற பதில் அரசாங்க அதிபர்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் கடமையின் போது உயிரிழந்த, பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கு சென்று அவர்களது துக்கத்தில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்கெடுத்துள்ளார்.

யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி சுபாஷ், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்த நிலையில், உயிரிழக்கும் போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.

யாழில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரின் வீட்டிற்கு சென்ற பதில் அரசாங்க அதிபர்! | Jaffna Police Officer Died Mourning Pradeepan

இவ்வாறான நிலையில், கடந்த பொதுத் தேர்தல் தினத்தன்று யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தேர்தல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை திடீரென உயிரிழந்துள்ளார்.

தேர்தல் காலத்தில் தெரிவித்தாட்சி அலுவலராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கடமையாற்றிய நிலையில், தேர்தல் காலத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்த காரணத்தினால் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கெடுத்தார்.