23 நாட்களாக உயிருக்கு போராடிய யாழ்ப்பாண மாணவன்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

23 நாட்களாக உயிருக்கு போராடிய யாழ்ப்பாண மாணவன்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பதுளை - மகியங்கனை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

23 நாட்களாக உயிருக்கு போராடிய யாழ்ப்பாண மாணவன்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! | Bus Involved Accident Jaffna Student Diedசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த முதலாம் திகதி கொழும்பில் இருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை - மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது.

23 நாட்களாக உயிருக்கு போராடிய யாழ்ப்பாண மாணவன்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! | Bus Involved Accident Jaffna Student Died  இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருந்தனர். பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

23 நாட்களாக உயிருக்கு போராடிய யாழ்ப்பாண மாணவன்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! | Bus Involved Accident Jaffna Student Died

படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், இன்றையதினம் (23-11-2024) அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது