
யாழில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் குருபூசை தினம் அனுஷ்டிப்பு!
யாழில் தென்னிந்திய முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை தின நினைவேந்தல் நினைவுகூரப்பட்டது.
யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியில் நேற்றையதினம் (29-12-2024) கேட்பன் விஜய்காந்திற்கு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கான மலர் மாலை அணிவித்தது, சுடர் ஏற்றி, ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்று. மேலும் மதியபோசனமும் வழங்கப்பட்டது.