யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமாகும் இரவுநேர தொடருந்து சேவை

யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமாகும் இரவுநேர தொடருந்து சேவை

கொழும்பு(colombo) கோட்டைதொடருந்து நிலையத்திற்கும் காங்கேசன்துறை (kankesanthurai)தொடருந்து நிலையத்திற்கும் இடையில் யாழ்ப்பாண இரவு அஞ்சல் தொடருந்து சேவையை தொடருந்து திணைக்களம் ஜனவரி 31 ஆம் திகதி முதல் தொடங்க உள்ளது என்று தொடருந்து திணைக்கள பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த தொடருந்து சேவை தொடங்கப்படவுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சேவையைத் தொடங்குவதோடு மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்துடனான (jaffna)இணைப்பை மேம்படுத்தவும் மேலதிக சேவைகளை வழங்கவும் துறை இலக்கு வைத்துள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமாகும் இரவுநேர தொடருந்து சேவை | Jaffna Night Mail Train Serviceஅத்துடன் மலையக தொடருந்து பாதையில் எல்லவுக்கு தொடருந்துகளுக்கான அதிக தேவைக்கு பதிலளிக்கும் வகையில், கூடுதல் தொடருந்து சேவைகளை வழங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, பெப்ரவரி 1 ஆம்திகதி தொடங்கி ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டியிலிருந்து டெமோதரவுக்கு மற்றொரு தொடருந்து சேவை ஒதுக்கப்படும்.

இந்த தொடருந்து 350 இருக்கைகள் கொண்டதாக இருக்கும், தேவையை பூர்த்தி செய்ய டிக்கெட் விலை ரூ. 7,000.ஆகும். மேலதிகமாக, பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் நானுஓயாவிலிருந்து எல்லவுக்கு தினமும் மற்றொரு தொடருந்து சேவை இயக்கப்படும்.