
அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாவை
இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ். போதனா வைத்தியசாலையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்ட மாவை சேனாதிராஜாவிற்கு தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.