யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவரின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவரின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

யாழ். வடமராட்சி கிழக்கில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மகன் தாக்கியதில் படுகாயமடைந்த நேற்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம்  தொடர்பில் மேலும்  தெரியவருகையில்,’

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவரின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு | Father Killed In Attack By Foreigner In Jaffnaகுடும்பத்தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும், சகோதரனின் மனைவி மீதும் ஆட்களை அழைத்து வந்து வீடு புகுந்து தாக்குதல் நடத்தியிருந்தார்.

சம்பவத்தில் அடிகாயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் பலத்த காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை நேற்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தாக்குதல் நடத்திய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் உள்ளிட்ட மூவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.