வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

சூரியனின் வடக்கு நோக்கிப் இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் 5 முதல் 14 வரை இலங்கையைச் சுற்றியுள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே இன்று (06) நண்பகல் 12:12 மணியளவில் களுத்துறை, கெலிங்கந்த, கஹவத்தை, பொக்குனுதென்ன மற்றும் மஹவெலதொட்ட பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.04.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு | Weather Forecast For Today Dept Of Meteorology

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75மி.மீ வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் அபாயங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.