தென்னிலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு

தென்னிலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு

கிரிபத்கொடை (Kiribathgoda) பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சம்பவம் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் கிரிபத்கொடை - கால சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை சோதனை செய்த வேளை, ​​சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.  

மேலும் காயமடைந்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் (Jaffna) கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு | One Injured Gun Shooting In Kiribathgoda Today

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.