
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்று (16) ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.