இரண்டு பொருட்களுக்கு வற் வரியில் இருந்து விலக்கு! அரசாங்கம் அறிவிப்பு

இரண்டு பொருட்களுக்கு வற் வரியில் இருந்து விலக்கு! அரசாங்கம் அறிவிப்பு

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றிற்கு வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வற் வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு பொருட்களுக்கு வற் வரியில் இருந்து விலக்கு! அரசாங்கம் அறிவிப்பு | Financial Notification Regarding Vat

வற் வரி திருத்த வர்த்தமானி ஏப்ரல் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, தொடர்புடைய சட்டம் குறித்த திகதியில் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு வருவாய்த் துறை பல வரித் திருத்தங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.