சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்ற நண்பர் குழு ; இறுதியில் நேர்ந்த விபரீதம்

சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்ற நண்பர் குழு ; இறுதியில் நேர்ந்த விபரீதம்

நாவலப்பிட்டி கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி வெஸ்டல் அதெட்டன் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய  இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்ற நண்பர் குழு ; இறுதியில் நேர்ந்த விபரீதம் | A Group Of Friends Went To A Waterfall Illegally

காணாமல் போன இளைஞர், அவரது நான்கு நண்பர்களுடன், நேற்று (17) காலை கலபட நீர்வீழ்ச்சிக்கு கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்காமலும், பிரதான நுழைவாயிலில் பற்றுச்சீட்டுக்களைப் பெறாமலும் சென்றுள்ளார்.

மேலும் நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள காட்டின் வழியாக சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்

காணாமல் போன இளைஞன் கொழும்பு வேலை செய்பவர் எனவும் புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.