உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 200ஐ நெருங்கும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 200ஐ நெருங்கும் முறைப்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 200ஐ அண்மித்துள்ளது.

அதன்படி இதுவரை (மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல்) 198 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 154 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 44 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 200ஐ நெருங்கும் முறைப்பாடுகள் | Election Commission In Sri Lanka

மேலும், இந்த குற்றங்கள் தொடர்பில் 20 வேட்பாளர்களும் 68 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, 16 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.