தேங்காய் ஏற்றுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

தேங்காய் ஏற்றுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

இந்த ஆண்டின் (2025) முதல் ஐந்து மாதங்களில் தேயிலை மற்றும் தேங்காய் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கடந்த ஆண்டின் (2024) முதல் ஐந்து மாதங்களில் 565.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (USD) இருந்த தேயிலை ஏற்றுமதி வருவாய், இந்த ஆண்டின் (2025) முதல் ஐந்து மாதங்களில் 7.9 சதவீதம் அதிகரித்து 610.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

மேலும், தேங்காய் ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் (2024) முதல் ஐந்து மாதங்களில் 158.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டின் (2025) முதல் ஐந்து மாதங்களில் 25.3 சதவீதம் அதிகரித்து 198.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

தேங்காய் ஏற்றுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு | Coconut Export Earnings Increased Coconut Price

இந்த ஐந்து மாதங்களில் கருப்பு தானிய ஏற்றுமதி வருவாய் 55.8 சதவீதம் அதிகரித்து 171.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.   

நாட்டில் தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.