நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் பின்வருமாறு, கொழும்பு மாவட்டம் - சீதாவக்க களுத்துறை மாவட்டம்  - இங்கிரிய - ஹொரணை, கேகாலை மாவட்டம் - தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டம்  - கொத்மலை, இரத்தினபுரி மாவட்டம்  - இரத்தினபுரி

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | Heavy Rain Weather Forecast For The Next 24 Hours

வடக்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19.09.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | Heavy Rain Weather Forecast For The Next 24 Hours

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  

மேலும் யாழில் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கன மழை பெற்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.