யாழில் வணிக நிலையமொன்றில் பணியாற்றியவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் வணிக நிலையமொன்றில் பணியாற்றியவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் தகரங்கள் மேலே விழுந்ததால் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்தார். மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த ஹரிகரராஜா டலஸ்குமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் யாழில் உள்ள ஒரு ஹாட்வெயார் கடையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் 14ஆம் திகதி கடையில் அடுக்கப்பட்டிருந்த தகரங்களை நகர்த்துவதற்கு முயற்சித்தார். இதன் போது தகரங்கள் அவர் மீது விழுந்ததில் அவர் மயக்கமுற்றார்.

 பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.