கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேறிய பொலிஸார் பாடசாலையில் தஞ்சம்

கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேறிய பொலிஸார் பாடசாலையில் தஞ்சம்

  யாழ். கோப்பாய் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்த தனியார் வீட்டில் இருந்து வெளியேறும் பொலிஸார் கல்வியங்காடு ஞானோதயா பாடசாலையில் தற்காலிகமாக பயன்படுத்தவுள்ளனர்.

தனியாருக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியிருந்த கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக நில உரிமையாளர்கள் தொடுத்த வழக்கை விசாரித்து வந்த யாழ்ப்பாணம் நீதிமன்றம் அந்தக் காணியை உரிமையாளரிடம் கையளிக்க உத்தரவிட்டது.

கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேறிய பொலிஸார் பாடசாலையில் தஞ்சம் | Kopay Who Left The House Take In The School

அதற்கு அமைய பொலிஸார் அந்தக் காணியை உரிமையாளர்களிடம் கையளித்தனர். இவ்வாறு வீட்டுடன் கூடிய காணி கையளிக்கப்பட்டதனால் ஏற்பட்ட இட நெருக்கடியைத் தீர்க்கவே பொலிஸார் தங்குவதற்கான பாவனைக்கு கல்வியங்காடு ஞானோதயா பாடசாலையைப் பொலிஸார் பயன்படுத்தவிருக்கின்றனர்.

ஆளுநரின் அனுமதியின் பெயரில் 6 மாத காலங்களுக்கு , பாடசாலை பொலிஸாரின் பாவனைக்கு  தற்காலிகமாக வழங்கியுள்ளதாக  கல்வி அமைச்சின் அதிகாரிகள்   தெரிவித்துள்ளதாக  கூறப்படுகின்றது.

அதேவேளை கல்வியங்காடு ஞானோதயா பாடசாலை சில காலம் இயங்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.