வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
அடுத்த மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி மீண்டும் தொடங்கும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது.
தற்போது அச்சிடுவதற்கு கிட்டத்தட்ட 400,000 எண் தகடுகள் நிலுவையில் உள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
அந்தவகையில் புதிய இலக்கத் தகடு தயாரிப்பு சர்வதேச தரத்திற்கு இணங்க இருக்கும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
முந்தைய டெண்டர் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதன் காரணமாக வாகன உரிமையாளர்கள் தற்காலிக இலக்கத் தகடுகளைக் காட்சிப்படுத்த திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.