பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் ஒன்றுக் கூடல்

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் ஒன்றுக் கூடல்

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்று மீண்டும் ஒன்றுக் கூடவுள்ளனர்.
 
இன்று முற்பகல் இந்த ஒன்றுக் கூடல் இடம்பெறவுள்ளது.
 
அத்துடன் மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
 
பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை ஒன்றுக் கூடினர்.
 
எனினும், அன்றைய தினம் அது தொடர்பான எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை.
 
இதனையடுத்து, இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்ரிய, இந்த வாரத்திற்குள் பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.