பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி அமைச்சால் தடை செய்யப்பட்டிருந்த பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீளவும் ஆரம்பிக்க விளையாட்டு மற்றும் சுகாதார அமைச்சுக்கள் அனுமதி வழங்கியுள்ளன.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் மேற்படி விடயம் தொடர்பான சந்திப்புஇடம்பெற்றது.

இதன்போது சுகாதார தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க இரண்டு அமைச்சுக்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த காலகட்டத்தில் முன்னெடுக்கக் கூடிய விளையாட்டுப் போட்டிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.